'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி! - Kalviseithi net

Breaking

Friday 9 September 2022

'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!

 'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!

நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யும் பச்சைப்படுகொலை! 

'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!

'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!

09-09-2022

‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள்

80% தோல்வி; மாணவி தற்கொலைக்கு

அரசே பொறுப்பேற்க வேண்டும்!

தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை

சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து

பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீட் தேர்வை இரத்துச் செய்யாமல்

மாணவர்களின் உயிரோடு விளையாடும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு

அரசுகளின் துரோகச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

திருத்தணியைச் சேர்ந்த மற்றொரு தங்கை ஜெயசுதா நீட் தேர்வு

தோல்வியால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்

சேர்க்கப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காக உயிரைவிடும் எண்ணத்தைத்

எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும்,

போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற

தமிழ்ப்பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும்

நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது

என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். போராடி

வாழ்க்கையை வென்று கனவிலே வெற்றிபெற

உள்ளவுருதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என

தம்பி, தங்கையர்களுக்கு அண்ணனாக இருந்து

அறிவுறுத்துகிறேன்.

நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின்

மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற

தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள்


09-09-2022
அதிமுக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு
இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் ஒரே ஒரு அரசுப்பள்ளி மாணவர்கூட
நடப்பாண்டில் மருத்துவ மாணவராக தேர்வாகியிருக்க முடியாது என்பதே நடைமுறை
உண்மையாகும்.
இந்திய ஒன்றிய அளவில் கல்வித்தரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள
தமிழ்நாடு, நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் இந்த ஆண்டு 29வது
இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கல்வியில் தமிழ்நாட்டைவிட
பின் தங்கியுள்ள டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்
உள்ளிட்ட மாநிலங்கள் 70 விழுக்காடு அளவிற்கு வெற்றிப்பெற்று முதல்
10 இடங்களுக்குள் வந்துள்ளது நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள்
நடைபெற்றிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இவையெல்லாம் நீட்
தேர்வு என்பது கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை
சிதைக்க உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆகவே, நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக்
கனவோ பறிபோகாது தடுக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தின்
கிடப்பிலிருக்கிற நீட் தேர்வு மறுசீராய்வு வழக்கை விரைந்து
விசாரிக்கக்கோரி சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனவும்
கேட்டுக்கொள்கிறேன். அதனைச் செய்யாது, பிணக்குவியல்
மேலே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்கும்
பச்சைத்துரோகத்தைத் திமுக அரசு இனியும் தொடரக்கூடாது
எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

-->